நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் உரை..
நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் பேசியதாவது:
Advertisement
Advertisement
”தவெக மீதான நம்பிக்கை தீர்மானத்தை பாஜகவுக்கு எதிரான பிரசாரம் போன்று மாண்பை மீறி சிலர் பேசிவிட்டனர். ஒற்றை தாமரை என்று ஒருவர் கூறினார். கடந்த காலத்தில் பாருங்கள் இரு எம்பிக்களுடன் இருந்த பாஜக, தற்போது மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது.
தமிழகத்தில் காலூன்றாது என்கிறார்கள். அதனை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக, தவெக அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை வகிக்கப் போகிறது” என்றார்.
BJP to Remain Neutral in Confidence Vote! — MLA Bhojarajan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.