பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தது குறித்து...
பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பாக மத்திய அரசு மீதான விமர்சனங்கள் குறித்து, மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது:
நாட்டின் அனைத்து சொத்துகளையும் அவர்களுடைய (மத்திய அரசு) நண்பர்களுக்கு விற்றுவிட்டனர். இப்படித்தான் ஒரு நாடு முன்னேறுகிறதா? இப்படித்தான் ஒரு நாடு செல்வந்தமாகிறதா? நீங்கள் அனைவரையும் செழிப்பாக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். இதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது.
Advertisement
Advertisement
அவர்கள் யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை. அவர்களின் கொள்கைகள் அவர்களை மிகவும் ஆணவமாக இருக்க வழிவகை செய்கிறது. அதனால், அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற இடங்களை வெல்வது மட்டுமே நாட்டின் நலனுக்கு உதவாது.
தன்னிச்சையாக விலைகளை உயர்த்துவது, வேலை வாய்ப்புகளைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் அல்ல; மாறாக சிறந்த கொள்கைகளை வகுத்து, ஏழைகளுக்காக திறம்பட உழைப்பதன் மூலமே நீங்கள் நல்பெயரைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.
Congress leader Mallikarjun Kharge stated on Monday that the BJP's policy is for the rich to remain rich and the poor to remain poor.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.