முகப்பு
தமிழ்நாடு

உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு
பகிர்:

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, நிதித் துறைச் செயலர் உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்துள்ளது.

தமிழகத்தில் நிதித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

கெய்டென்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தாரேஸ் அகமது, சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர்நலன் மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வரின் தனிச்செயலர் - 3 ஆக இருந்த அனு ஜார்ஜ், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

summary

Five IAS Officers, Including Udayachandran, Transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments