முகப்பு
தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராக நியமனம்.

Updated On : 2 ஜூன் 2026, 8:16 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 2) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராகவும், நிதித் துறை ஆணையராக இருந்த பிரதீவ்ராஜ் கரூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தேவக்கோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மை செயலாளராக இருந்த ஹர்மீத் சிங் பேடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுவாதி ஸ்ரீ, திருச்சி ஊரக முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்காட் நிறுவன செயல் இயக்குநராக இருந்த தீபனா விஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

summary

IAS Officers Transferred by tamilnadu goverment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.