ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராக நியமனம்.
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 2) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராகவும், நிதித் துறை ஆணையராக இருந்த பிரதீவ்ராஜ் கரூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
தேவக்கோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மை செயலாளராக இருந்த ஹர்மீத் சிங் பேடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுவாதி ஸ்ரீ, திருச்சி ஊரக முகமை கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை ஆட்சியராக இருந்த சுகுமார் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்தினசாமி தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குநர் அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டுத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் விஜயராணி, தோட்டக்கலை மற்றும் பயிர்கள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தோட்டக்கலை மற்றும் பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்காட் நிறுவன செயல் இயக்குநராக இருந்த தீபனா விஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
IAS Officers Transferred by tamilnadu goverment
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.