ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இதன்படி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தியா வேனுகோபால் சர்மா, வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை செயலாளராக குமரகுருபரன், சுற்றுலா, கலாச்சாரத் துறை முதன்மைச் செயலாளராக ஸ்வர்ணா நியமனம் தொழில், முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்துரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ், ஜவுளித்துறை ஆணையராக சோபனா, தொழிலாளர் துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ், நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா, மீன்வளத் துறை இயக்குநராக விஜயகார்த்திகேயன், சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெள்யிட்டுள்ளது.