மதுக் கடைகளை மூடும் உத்தரவு: கமல்ஹாசன் வரவேற்பு
தமிழகத்தின் புதிய அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தின் புதிய அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. நீண்ட நாள்களாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. விஜய்யை திரைப்பட நடிகராக மட்டும் பாா்க்கக் கூடாது.
வேறு சில கடமைகளும் அவருக்கு உள்ளது. எந்தத் துறையில் இருந்தும் அரசியலுக்கு வரலாம். எங்கள் துறையில் இருந்து வந்தது பெருமையாக உள்ளது’ என்றாா்.
Advertisement