நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை! கனிமொழி
நீட் தேர்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி கருத்து...
நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அடுத்தாண்டு முதல் கணினிவழியாக நீட் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க.
தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு.
நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!" என்று பதிவிட்டுள்ளார்.
Until NEET is abolished, our children will have no peace: Kanimozhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.