11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!
சோழர் கால செப்பேடுகள்: பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!
தி ஹேக் : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தில் ஒருகட்டமாக வெள்ளிக்கிழமை(மே 15) நெதர்லாந்துக்குச் சென்றடைந்தார். இந்த நிலையில், 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்தது நெதர்லாந்து அரசு.
இது குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், செப்பேடுகளில் 21 பெரிய தகடுகள் அடங்கிய ஒரு தொகுப்பும் மூன்று சிறிய தகடுகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெருமளவில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில், முதலாம் ராஜேந்திர சோழன் தமது தந்தையான முதலாம் ராஜராஜனுக்கு வாய்மொழியாக அளித்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இந்தியாவில் நாம் சோழர்களைக் குறித்தும் அவர்தம் பண்பாடு குறித்தும் மிகுதியாக பெருமைகொள்கிறோம்.
Advertisement
கடந்த 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து நெதர்லாந்தின் ‘லெய்டென்’ பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட செப்புத் தகடுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டதமைக்கும் நன்றி தெரிவித்தார்.