உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி
இந்தியாவுடன் தொழில்நுட்பத் துறையில் இணைந்து பணியாற்ற மற்ற நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தது குறித்து...
இந்தியாவுடன் தொழில்நுட்பத் துறையில் இணைந்து பணியாற்ற மற்ற நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் விவாடெக் 2026 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, "உலகளாவிய நெருக்கடி காலத்திலும் அனைவருக்குமான தொழில்நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. செயற்கை நுண்ணறிவை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். அது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
இந்தியாவை பொருத்தவரையில், செயற்கை நுண்ணறிவு என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு திறந்த சமூகமாகவும், உலகின் மிகப்பெரிய திறமை மிகுந்த மையமாகவும் இருக்கிறது.
Advertisement
Advertisement
நாங்கள் விதிமுறைகளை எளிமைப்படுத்தி, வணிகத்தை எளிதாக்குகிறோம்.
புதுப்புது கண்டுபிடிப்புகள் முதல் வணிகமயமாக்கல் வரையில், 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான இலக்குசார் ஊக்கத்தொகைகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம்.
உலகின் மிகவும் மலிவு விலையில் இணைய சேவை மற்றும் குறைந்த விலையில் பசுமை ஆற்றலையும் வழங்குகிறோம். தொழிற்துறையை மேம்படுத்துவதில் நமது அரசின் அணுகுமுறை தெளிவாக உள்ளது.
முன்னெப்போதையும்விட நாம் ஒன்றாக வேகமாகப் பயணிப்போம். இங்கு உள்ள அனைவரும் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி, அனைவருக்கும் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.