பிரான்ஸ்: முன்னணி நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரான்ஸில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து...
பிரான்ஸில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக ஸ்லோவோக்கியா, பிரான்ஸ், பாரீஸ் ஆகிய 3 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதனிடையே, பாரீஸ் நகரில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் கட்டுமானத் துறை, போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஆர்தர் மென்ஸ்ச், அல்ஸ்டோம் சிஇஓ மார்ட்டின் சியோன், செயின்ட்கோபெய்ன் சிஇஓ பெனாய்ட் பெஸின், சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் ரோடோல்பே சடே உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.