பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!
பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது ஜார்க்கண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள நாகரி காவல் நிலையத்தில் பாஜகவின் மண்டலத் தலைவர் ரிதேஷ் ராஜ் மஹ்தோ நேற்று புகார் ஒன்றை அளித்தார்.
அதில், சாஹர் கிராமத்தைச் சேர்ந்த அலீம் அன்சாரி என்பவர், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய விடியோ ஒன்றை வெளியிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
மேலும் பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்றோருக்கு எதிரான அவதூறு கருத்துகளைப் பயன்படுத்தி அவர்களைக் கொலை செய்வதாக மிரட்டி விடியோ பதிவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி அபிஷேக் ராய், "குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். அவர், சர்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்டு சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயன்றதாகவும், புனிதமான அரசியலமைப்புப் பதவிகளை வெளிப்படையாக அவமதித்ததாகவும் புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.
Case registered against person who issued death threats to Prime Minister Modi, Amit Shah, and Yogi Adityanath!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.