FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

1947-ல் மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது! - உ.பி. முதல்வர் பேச்சு!

1947 ஆம் ஆண்டு மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 7:17 pm IST
பிரதமா் நரேந்திர மோடி, உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத். - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா சுதந்திரம் பெற்றபோது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவிணையின்போது ஏற்பட்ட வன்முறைகளை நினைவுகூர்ந்து லக்னௌ நகரத்தில் இன்று (ஆக. 14) நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்தியாவின் பிரிவிணைக்கு காங்கிரஸ்தான் காரணம் எனவும், 1947 ஆம் ஆண்டு மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்காது. சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஒருவர் அந்தக் காலத்தில் பிரதமராக இருந்திருந்தால் யாராலும் இந்தியாவை பிரித்திருக்க முடியாது.

காங்கிரஸ் உறுப்பினர்களின் கோழைத்தனமான செயலுக்கு நாடு விலைக்கொடுக்க நேரிட்டது. இந்தக் குணங்களை குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) போராட்டங்களின்போது நீங்கள் கண்டிருப்பீர்கள்” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 1947-ல் பாகிஸ்தான் கேட்காத பகுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனவும், இந்துக்கள் மற்றும் சிந்தி மக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாகாணம் ஆகியவை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

summary

Yogi Adityanath has stated that no adverse consequences would have occurred had Modi been the PM when India gained independence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments