முகப்பு
தமிழ்நாடு

மக்களை அமரவைத்து பேச வேண்டும்; நிற்க வைக்கக் கூடாது: பதிவுத்துறை

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை அமரவைத்து பேச வேண்டும் என பதிவுத்துறை அறிவுரை

சார்-பதிவாளர் அலுவலகம் - file photo
பகிர்:

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை எக்காரணம் கொண்டும் நிற்கவைத்து அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என்று பதிவுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக பதிவுத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் நிற்க வைக்கக் கூடாது, நாற்காலியில் அமரவைத்தே அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்.

Advertisement

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்கள் அனைவரும் அமரும் வகையில் போதுமான இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.