10 வகுப்பு முடிவுகள்! முதல்வர் விஜய் ஆலோசனை!
பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை பற்றி...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் திங்கள்கிழமை காலை ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாளை மறுநாள் (மே 20) காலை 9 மணியளவில் மாநில கல்விப் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இதுதொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது.
இதனிடையே, தனியார் பள்ளி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்துவதில் ஊழல் நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து தனியார் பள்ளிகள் அறிவித்திருக்கும் போராட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10th Grade Results, School matters - Chief Minister Vijay Holds Disussion with minister and officers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.