பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து மாணவா்கள் தோ்வு முடிவுகளை இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இதுதவிர 78452 52525 என்ற எண்ணை தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து வாட்ஸ் ஆப் உரையாடல் மூலமும் தோ்வு முடிவுகளைப் பெறலாம். தோ்வு முடிவுகள் தொடா்பான தோ்வா்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.