முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி மனு

தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 20 மே 2026, 2:41 am IST
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவா் பி.சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கோயில்களில் பணத்தின் அடிப்படையில் கடவுளை தரிசனம் செய்ய பாரபட்சம் காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.