சென்னையில் 5 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னையில் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பற்றி...
சென்னையில் 5 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பலர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட 5 காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
சென்னை ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருபாநிதி, மீனம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் கண்ணகி ஆகியோரை அவர்கள் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5 Police Inspectors in Chennai Transferred to Waiting List!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.