முகப்பு
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை! இருவர் கைது; உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

கோவை சிறுமி கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடல் ஒப்படைப்பு - Image grab from Video
பகிர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல் கூராய்வு முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முன்னதாக, காணாமல் போன அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் கூராய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.