கோவை சூலூர் சிறுமி கொலை: முதல்வர் மௌனம் ஏன்? பெற்றோர் ஆதங்கம்!
கோவை சூலூர் சிறுமி கொலைச் சம்பவத்தில் முதல்வர் மௌனமாக இருப்பது ஏன் என பெற்றோர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கோவை சூலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் தற்போது வரை எந்த கருத்தும் கூறவில்லை என உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிக்கு கொடுக்கப்படும் கடுமையான தண்டனை மூலம் இனிமேல் எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது, அந்த அளவிற்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதுவரை, சூலூர் சம்பவத்தில், முதல்வர் அலுவலக ரீதியாகக்கூட எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை. பாதிக்கப்பட்டது கஷ்டப்படும் குடும்பம் என்பதால் நிவாரண நிதி வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement