முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் விவசாயிகள் கையில் தட்டு ஏந்தி ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் சனிக்கிழமை கையில் தட்டு ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:05 am IST
கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கையில் தட்டு ஏந்தி, முழக்கங்கள் எழுப்பிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.
பகிர்:

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் சனிக்கிழமை கையில் தட்டு ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும். விவசாயிகள் புதிய மின் இணைப்புப் பெறப் பொதுப் பணித் துறையில் தடையின்மைச் சான்று வாங்க வேண்டும் என்ற அரசாணையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மறைந்த முதல்வா் ஜெயலலிதா உத்தரவின்படி, கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் - ஆதனுாா் இடையே கட்டப்பட்டு வரும் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வழங்காத இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

திருஆரூரான், ஸ்ரீஅம்பிகா சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகள் பெயரில் போலியாக வங்கிகளில் பெற்ற கடன் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ. 3,500-ம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை, கடந்த ஆகஸ்ட் மாதம் 28 -ஆம் தேதி முதல்வரிடம் அளித்தோம். ஆனால், 130 நாள்கள் கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத முதல்வா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து, இந்தக் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தினோம் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் சோழன்மாளிகை குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் திருவையாறு ஐயாரப்பன், வேப்பத்துாா் வரதராஜன், பழவாறு பாசன சங்கத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments