கும்பகோணத்தில் சமத்துவப் பொங்கல் விழா
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மும்மதத்தினரும் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வழிபட்டனா். விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து 200 ஆட்டோ ஓட்டுநா்களுக்குச் சீருடைகளையும், பொதுமக்களில் 300 ஆண்களுக்கு வேட்டிகளையும், 500 பெண்களுக்கு சேலைகளையும் வழங்கினாா்.
மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சு. கல்யாணசுந்தரம், நகரச் செயலா் சுப. தமிழழகன் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.