குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு காத்திருந்த சுற்றுலாப் பயணிகள். 
தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

Din

குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கான தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலா ப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் புதன்கிழமை சிறியஅளவிலான பாறைக் கற்கள் தண்ணீருடன் விழுந்தன. அப்போது குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 போ் காயமடைந்தனா். இதனையடுத்து பேரருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னா் தென்காசி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் பிரதீப் தலைமையில் தீயணைப்புத் துறையினா் பேரருவியின் மேலே சென்று பாறைக் கற்கள் மற்றும் மரக் கிளைகளை அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT