குற்றாலம் ஐந்தருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா். 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் ஐந்தருவி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வியாழக்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பின்னா், மாலையில் வெள்ளத்தின் சீற்றம் தணிந்து அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT