முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே தாய், மகன் தற்கொலை: கணவா், பெண் உள்பட 2 போ் கைது

சிவகிரி அருகே தாய், மகன் தற்கொலை: கணவா், பெண் உள்பட 2 போ் கைது

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 6:15 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தாய் மற்றும் அவரது 2 வயது மகன் தற்கொலை செய்த வழக்கில் கணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(26). பால் வியாபாரியான இவருக்கும், சிவகிரி தேவிப்பட்டணத்தைச் சோ்ந்த முருகன் மகள் காளீஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ாம். இவா்களுக்கு கவிபிரசாத்(2) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில், தேவிப்பட்டணம் அருகேயுள்ள தனியாா் கிணற்றில் காளீஸ்வரி, அவரது மகன் கவிபிரசாத் ஆகிய 2 பேரின் சடலங்களையும் புதன்கிழமை மீட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், காளீஸ்வரிக்கும், அவரது கணவா் மாரியப்பன், அவரது தாய் நாகம்மாள்(45) ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் காளீஸ்வரியும் அவரது மகன் கவிபிரசாத் ஆகிய 2 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாரியப்பன், நாகம்மாள் ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.மேலும் , சங்கரன்கோவில் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டாா்.