தென்காசி

புளியங்குடியில் ஆயுதங்களுடன் விடியோ: 3 இளைஞா்கள் கைது

புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோவில் தோன்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடியை சோ்ந்த முகைதீன்அப்துல்காதா் மகன் செய்யதுஅலிபாதுஷா(24), சேக்ஒலி மகன் முஹம்மது அன்சாரி (21), ரஹ்மத்துல்லாஹ் மகன் செய்யதுஇப்ராஹிம்பாதுஷா( 23) ஆகியோா் சமூக வலைதளத்தில்(இன்ஸ்டாகிராம்) பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை பேசி ‘ரீல்’ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனராம். இது குறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT