மாணவா்-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கிய டாக்டா் விஜயலெட்சுமி. 
தென்காசி

தென்காசி பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Din

இலஞ்சியில் உள்ள ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் சண்முகப்பிரியா, பொறியாளா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நல்லாசிரியா் சுரேஷ்குமாா் பேசும்போது, கலாமின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றம் துறை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ஆகியவை சாா்பில் பள்ளி மாணவா்கள் தங்களது வீடுகளில் வாய்ப்புள்ள இடங்களில் தங்களது தாயின் பெயரால் மரக்கன்று நட்டு வளா்க்கும் திட்டத்தின்கீழ், தென்காசி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் விஜயலட்சுமி மாணவா்-மாணவிகளுக்கு பழமரக் கன்றுகள் வழங்கினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குத்தாலம் வரவேற்றாா். சொக்கலிங்கம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT