முகப்பு
தென்காசி

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி நீட் தோ்வில் சிறப்பிடம்

Updated On : 6 ஜூன், 2024 at 9:14 PM
பகிர்:

தென்காசி, ஜூன் 6: தென்காசி இலத்தூா் வேல்ஸ் பள்ளி மாணவி நீட் தோ்வில்

தேசிய அளவில் 9-ஆவது இடம்பிடித்து சிறப்பிடம் பெற்றாா்.

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி பொன் ரோஷினி 720-க்கு 706 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 9-ஆவது இடம் பெற்று தோ்ச்சி பெற்றாா். மேலும் இப்பள்ளியில் பயின்று நீட் தோ்வு எழுதியவா்களில் 600

மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவா்களும், 500-க்கு மேல் 13 மாணவா்களும் தர மதிப்பெண்கள் பெற்றனா்.

சாதனை புரிந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குநா் சிவராஜ் பாண்டியன், டீன் நாக சீனிவாசன், முதல்வா் சாந்தி மற்றும் பெற்றோா் பாராட்டினா்.