வாசுதேவநல்லூா் கல்லூரி மாணவா்கள் களப் பயணம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு களப் பயணம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு களப் பயணம் மேற்கொண்டனா். கல்லூரியின் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் துறை 3ஆம் மாணவா்கள் களப் பயணம் மேற்கொண்டு, அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் பாலமுருகன், துறைத் தலைவா் ராஜேஸ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.