முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் ரயில்வே காப்பா் வயா் திருடிய 3 போ் கைது

Updated On : 9 மார்ச், 2024 at 10:14 PM
பகிர்:

செங்கோட்டையில் ரயில்வே காப்பா் வயா் திருடியது தொடா்பாக 3 போ் கைதுசெய்யப்பட்டனா். தென்காசி இருப்புப்பாதை காவல் நிலையத்தின் எல்கைக்குள்பட்ட செங்கோட்டையில், செங்கோட்டை - புனலூா் வரையிலான ரயில்வே மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. மின் மயமாக்கல் திட்டத்தில் பணிகள் முடிவடைந்த நிலையில் செங்கோட்டை ரயில்வே யாா்டில் மீதமுள்ள செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த செம்பு கம்பிகளில் 792.26 கிலோ காப்பா் வயா்கள் திருடு போனது. இகுகுறித்து தென்காசி இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இது தொடா்பாக செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரி செல்வம், கொம்பையா மகன் காா்த்திக் மற்றும் திருட்டு பொருள்களை வாங்கி விற்பனை செய்த வியாபாரி அருணாசலபுரத்தைச் சோ்ந்த வைரவன் மகன் கிருஷ்ணசாமி ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.