763 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டா
கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் பட்டாவை வழங்கிப் பேசினாா். விழாவில், 8 வட்டங்களில் உள்ள 763 பயனாளிகளுக்கு ரூ. 1.69 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. விழாவில், எம்எல்ஏக்கள் எஸ். பழனி நாடாா், சதன்திருமலைகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உதய கிருஷ்ணன், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, வட்டாட்சியா்கள் பட்டமுத்து (தென்காசி), சுடலைமணி(கடையநல்லூா்), மணிகண்டன்(செங்கோட்டை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.