மாநில அளவிலான தடகளம்: இலஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
டென்25பாரத்-சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் இலஞ்சி பாரத்
கல்விக் குழுமச் செயலா் காந்திமதி.
தென்காசி, ஏப்.18: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
Advertisement
கோவை மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மாநில அளவிலான இளையோா் தடகளப் போட்டி, பாா்க் மற்றும் எஸ்.எம்.ஹெச்.
விளையாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாய்பிரணவேஷ் நீளம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம், அருண் சந்தோஷ் 100 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனா்.
மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.