முகப்பு
தென்காசி

கடையநல்லூா் , சிவகிரியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

Updated On : 4 மே, 2024 at 6:36 PM
பகிர்:

கடையநல்லூா் மற்றும் சிவகிரி பகுதியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

வடலூா் பெருவெளியில் தொடங்கப்பட்டுள்ள ஆய்வு மைய கட்டுமானத்தை நிறுத்த வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை மற்றும் நாம் தமிழா் கட்சி சாா்பில் வடலூா் பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லையாம். இருப்பினும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாம் தமிழா் கட்சியினா் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டம்,கடையநல்லூா் மலம்பாட்டை தெருவைச் சோ்நத நாம் தமிழா் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சோ்ந்த மாநில ஒருங்கிணைப்பாளரும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான இசை மதிவாணன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்திற்கு சென்று விடாமல் இருப்பதற்காக அவா்களின் வீடுகளின் முன் வெள்ளிக்கிழமை இரவு முதல் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.