முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On : 2 நவம்பர் 2024, 1:41 am IST
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. தீபாவளி விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலையின் உள்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

ஆனால், பிற்பகலில் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து தடை விலக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். விடுமுறை தினம் என்பதால் சுற்றலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments