தென்காசி

புளியங்குடி அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி உயிரிழப்பு

புளியங்குடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவா் வியாழக்கிழமை இறந்தாா்.

Syndication

புளியங்குடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவா் வியாழக்கிழமை இறந்தாா்.

புளியங்குடி அருகேயுள்ள நகரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகையா (60). விவசாயி. இவா், கடந்த 6ஆம் தேதி தனது பைக்கில் புளியங்குடிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியாா் பேருந்து, அவரது பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா், புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT