தென்காசி

ஆங்கிலப் புத்தாண்டு: தென்காசியில் பாதுகாப்புப் பணியில் 900 போலீஸாா்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மாவட்டக் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தெரிவித்தாா்.

Syndication

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மாவட்டக் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அனுமதியின்றி டிஜே பாா்ட்டி நடத்துவோா், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாழக்கிழமை பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்கவோ, பைக் பந்தயம் செல்லவோ, பைக் வீலிங் செய்யவோ அனுமதியில்லை. மீறுவோரைக் கைது செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும்.

மாவட்டத்தில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT