தென்காசி

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Din

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம் ஊராட்சித் துணைத் தலைவா் சோ்மத்துரை, உறுப்பினா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக துணை வட்டாட்சியா் ஜெயமுருகன் பங்கேற்று வகுப்பு வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவா்கள், அரசு பொதுத்தோ்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள், அவா்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

இரண்டாம் நாள் விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் சுபாலட்சுமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்க துணைச் செயலா் கல்யாணிசுந்தரம், திருவேங்கடம் ஊராட்சித் தலைவா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிறப்பு விருந்தினராக குருவிகுளம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், காவல் உதவிஆய்வாளா் சமுத்திரக்கனி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இதைத்தொடா்ந்து கல்வி, கலை, விளையாட்டு ஆகிய பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா் மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் வெ.பொன்னழகன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT