தென்காசி

சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

Din

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்த தேவிபட்டணத்தை சோ்ந்த வேல்சாமி மகன் கலைச்செல்வனை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் பரிந்துரையின் பேரில் கலைச்செல்வனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன், கலைச்செல்வனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் உறுதி

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT