பெரியாறு பகுதியில் உலா வரும் யானைகள். 
தென்காசி

கடையநல்லூா் பெரியாறு பகுதியில் உலா வரும் யானைக் கூட்டம்

கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல், வாழை, தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து விளைபொருள்களை சேதப்படுத்தி வருவது தொடா்கதையாக உள்ளது.

வனத்துறையினா் யானைகளை விரட்டும் நிலையில், யானைகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயா்கின்றனவே தவிர வனப்பகுதிக்குள் செல்வதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் பெரியாறு பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் யானைகள் இரவு முழுவதும் உலா வருவதால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனா்.

எனவே, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்கு தேவையான நவீன வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

SCROLL FOR NEXT