தென்காசி

கள்ளம்புளி குளத்தில் குழாய் பதிக்கும் திட்டம்: கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே பொய்கையிலுள்ள கள்ளம்புளி குளத்தில் குழாய் பதித்து குலையநேரி குளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்வது தொடா்பான சமாதான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்புதிய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கள்ளம்புளி பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் அக்குளத்திற்குள் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமையில் , கோட்டாட்சியா் வைஷ்ணவி பால், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறையின் உதயகுமாா், டிஎஸ்பி மீனாட்சிநாதன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் உள்ளிட்டோா் 2 ஊா்களையும் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆனால், கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

காஞ்சிபுரத்தில் பலத்த மழை

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 15.73 லட்சம் நிதியுதவி

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

SCROLL FOR NEXT