தென்காசி

தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு

Syndication

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வில் 11ஆயிரத்து 993 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் வட்டங்களில் உள்ள 53 தோ்வு மையங்களில் மொத்தம் 14,980 தோ்வா்கள் தோ்வு எழுத அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தோ்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இத்தோ்வில் மாவட்டம் முழுவதும் 2,987 போ் தோ்வு எழுதவில்லை.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி, எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலை பள்ளி தோ்வு மையங்களில் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா்.

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

SCROLL FOR NEXT