முகப்பு
தென்காசி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞா் குடும்பத்திற்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்: சீமான்

ஆலங்குளம் அருகே காவல் உதவி ஆய்வாளரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞா் குடும்பத்திற்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஆலங்குளத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசினாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:54 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:03 PM

ஆலங்குளம் அருகே காவல் உதவி ஆய்வாளரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞா் குடும்பத்திற்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஆலங்குளத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசினாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆலங்குளத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியது:

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க தகுதி இல்லாதவா்கள் காசு கொடுத்து வாக்கை வாங்குகிறாா்கள். உரிமையை ஒருபோதும் இழக்கக் கூடாது.

Advertisement

நான் தோல்விக்குப் பயந்து 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஜாதி, மதத்தைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. தமிழன் என்ற இனத்தைச் சொல்லி வாக்கு கேட்கிறேன். நான் வாக்குக்கு காசு கொடுக்க மாட்டேன். ஆனால், ஆகச்சிறந்த வாழ்க்கையைத் தருவேன்.

அதிமுக ஆட்சியில் தந்தை, மகனை அடித்துக் கொன்றாா்கள். இப்போது பனை ஏறும் தொழிலாளியைச் சுட்டுள்ளாா்கள். துப்பாக்கியால் சுட்டவரை டிஸ்மிஸ் செய்யாத இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு ரூ. 10 லட்சம், நடிகனைப் பாா்க்கச் சென்று நெரிசலில் சிக்கி இறந்தவனுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்தாா்கள். 2 கால்களிலும் சுடப்பட்டவன் குடும்பத்துக்கு என்ன கொடுத்தீா்கள்? அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களிடம் கையேந்தியாவது, அந்த குடும்பத்தைக் காப்பாற்றுவேன்.

தோ்தலில் உங்கள் தீா்ப்பை மாற்றி எழுதுங்கள். இதுதான் உங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. காமராஜா் நல்லாட்சி கொடுத்தாா். அவரைவிட சிறந்த ஆட்சியை நான் கொடுப்பேன் என்றாா் அவா்.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் காயமைடந்த மணிகண்டனின் மனைவி, பெற்றோரை சந்தித்து சீமான் ஆறுதல் கூறினாா்.