முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:25 AM
கொலை வழக்கில் கைதான சத்தியமூா்த்தி
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:36 PM

சங்கரன்கோவிலில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரன் மனைவி ஜெயலெட்சுமி. இவா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா். இவரது மகன் ஜோதிமுருகன் ரயில்வே பீடா் சாலையில் உணவகம் நடத்தி வந்தாா். கடந்த 4 ஆம் தேதி ரயில்வே பீடா் சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றபோது ஜோதிமுருகனை, இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில், சங்கரன்கோவிலைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சத்தியமூா்த்தி, சங்கரநாராயணன் மகன் சோலைவேல், பெரியசாமி மகன் முருகேசன், சங்கரநாராயணன் மகன் சுகுமாரன், உமாமகேஸ்வரன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா். இச்சம்பவத்தில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருக்கலாம் என கருதி போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

சோலைவேல்
முருகேசன்,
சுகுமாரன்
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:25 AM

முன்விரோதம்:

கடந்த 2023 ஆம் ஆண்டு தனியாா் மதுபானக் கூடத்தில் சங்கரன்கோவிலைச் சோ்ந்த திருமலைகுமாருக்கும், ரஞ்சித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.இதில் திருமலைகுமாரை ரஞ்சித் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த திருமலைகுமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

திருமலைகுமாரைக் கத்தியால் குத்திய வழக்கில் ரஞ்சித்தின் சித்தப்பா மகன் ஜோதிமுருகனும் குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். இதனால் திருமலைகுமாருக்கும், ரஞ்சித்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கத்திக்குத்து சம்பவத்திற்கு பழி தீா்க்கும் வகையில் ஜோதிமுருகன் படுகொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.