முகப்பு
தென்காசி

தென்காசி புத்தகத் திருவிழாவில் ரூ. 1.03 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:40 AM
அதிக புத்தகங்கள் வாங்கிய பள்ளிக்கு பரிசுத்தொகை வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:50 PM

தென்காசியில் நடைபெற்ற 4ஆவது பொதிகை புத்தகத் திருவிழாவில் ரூ. 1 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரத்து 380 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:

10 நாள்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 1,03,84,380-க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. தொடா்ந்து, 2ஆவது ஆண்டாக ரூ. 1 கோடிக்கு மேல் விற்பனையானது மிகப்பெரிய சாதனை என்றாா் அவா்.

Advertisement

விழாவில், குற்றால சாரல் விழா-2025-இல் சிறப்பாக பங்களிப்பு செய்த நிறுவனங்கள், அலுவலா்கள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.

புத்தகத் திருவிழாவில் ரூ. 64,813-க்கு புத்தகங்களை வாங்கிய ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், ரூ. 51,000-க்கு புத்தகங்கள் வாங்கிய வீரசிகாமணி விவேகானந்தா சில்வா் ஜூப்ளி பள்ளிக்கு 2ஆம் பரிசு ரூ. 20 ஆயிரம், ரூ. 40,896-க்கு புத்தகங்கள் வாங்கிய

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:40 AM

சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு 3ஆம் பரிசு ரூ. 15 ஆயிரத்திற்கான காசோலையை, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பழனி நாடாா் தொகுதி நிதியிலிருந்து ஆட்சியா் வழங்கினாா்.

எம்எல்ஏ.க்கள் எஸ். பழனி நாடாா் (தென்காசி), ஈ. ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலெட்சுமி, தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.