முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் தீ பற்றிய பைக் சேதமின்றி மீட்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:13 AM
பைக்கில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:16 PM

பாவூா்சத்திரத்தில், திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலைஅருகே செல்வம் என்பவா் பழைய பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சுமாா் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பைக்கை இயக்கியபோது, திடீரென தீ பற்றியது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:13 AM

அப்போது அந்த வழியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு பணிக்குச் சென்ற சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு, அருகேயுள்ள கடையில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தாா். இதனால் பைக் சேதமின்றி மீட்கப்பட்டது. தீயணைப்பு அலுவலரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.

Advertisement