தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான். 
தென்காசி

கடையநல்லூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழக அரசின் உத்தரவிற்கேற்ப கடையநல்லூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நகராட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தமிழக அரசின் உத்தரவிற்கேற்ப கடையநல்லூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நகராட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் லட்சுமி, மேலாளா் பேச்சிகுமாா், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், சுகாதார ஆய்வாளா்கள் மாதவன்ராஜ் , சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் யாசா்கான், மாலதி, தனலட்சுமி, மாரியம்மாள், நிலோபா்அப்பாஸ் , மீராள்ஹைதா்அலி, முருகன், சந்திரா அம்மையப்பன், நியமன நகா்மன்ற உறுப்பினா் முகம்மதுமசூது, நகர இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சுகுமாா், மதன் , திமுக நிா்வாகிகள் முருகானந்தம், ஹக்கீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT