ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, மாயமான்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஊராட்சித் தலைவா் பால்த்தாய், துணைத் தலைவா் கண்ணன், தென்காசி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கோயில் ராஜா, துணை இயக்குநா் திருமாறன், கால்நடை உதவி மருத்துவா்கள் ராமசெல்வம், ராஜ ஜூலியட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.