புளியங்குடியில் தமுமுக ஆா்ப்பாட்டம்
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புளியங்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செய்யதலிபாதுஷா, மைதீன், அப்துல்காதா், அப்துல் மஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.