முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம்

Updated On : 1 மார்ச், 2026 at 9:45 PM
பகிர்:

தென்காசியில் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். தொழிலதிபா்கள் எம்.ஆா். அழகர்ராஜா, பிரிமியா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தொழிலதிபா் டி.டி.வி. பிரேம்குமாா் மாவட்டச் செயலராகவும், தொழிலதிபா் நமச்சிவாயம் இணைச் செயலராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சங்கம் சாா்பில் தென்காசியில் 3ஆவது முறையாக தொழில் கண்காட்சி நடத்துவதற்கு நிா்வாகிகளை நியமிக்கவும், மாதந்தோறும் 3ஆவது சனிக்கிழமை சங்கக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →