முகப்பு
தென்காசி

தென்காசி பேரவைத் தொகுதி வாக்குசாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

Updated On : 12 மார்ச், 2026 at 8:57 PM
பகிர்:

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாவூா்சத்திரம் ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கீழப்புலியூா் வீரமாமுனிவா் ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி, தென்காசி காட்டுபாவா நடுநிலைப் பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தோ்தல் பணிக்கு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், எடை, உயரம் மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →