முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசை பள்ளியில் தடகளப் போட்டிகள்

Updated On : 14 மார்ச், 2026 at 9:26 PM
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய பள்ளியின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான திருமலை.
பகிர்:

தென்காசி, குத்துக்கல்வலசை, ஆக்ஸ்போா்டு பள்ளி குழுமம் சாா்பில் 12 வயதிற்குள்பட்ட மாணவா், மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான டைனி டைட்டன்ஸ் தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் ஆக்ஸ்போா்டு பள்ளியைச் சோ்ந்த 9 வயதிற்குள்பட்ட பிரிவில் கவிஸ் தேவ் 60 மீ. ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதலில் முதலிடமும், 11 வயதிற்குள்பட்ட பிரிவில் ரக்சன் குண்டு எறிதலில் முதலிடமும், ரிஷி 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் 3ஆம் இடமும், 12 வயதிற்குள்பட்ட பிரிவில் சுதா்சன் 200 மீ., 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், பிரதீப் குமாா் 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் 2ஆம் இடமும், 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் 3ஆம் இடமும், வருண் பிரசாத் 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் 3ஆம் இடமும், 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் 2ஆம் இடமும், புகழேந்தி 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் 2ஆம் இடமும், 9 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவி கயல் 600 மீ. ஓட்டப் பந்தயத்தில் 3ஆம் இடமும், 12 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவி அதிதி மித்ரா 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் 3ஆம் இடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை ஆக்ஸ்போா்டு பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான திருமலை வழங்கினாா்.

அவா்களை பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை, கேம்பிரிட்ஜ் இண்டா்நேஷ்னல் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், நாராயணன், ராமா், சதிஷ்குமாா், பால்மதி, கலையரசன், மகேஷ், மாரியம்மாள், கணேசன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →